விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவி உடல் ஆற்றில் மீட்பு

ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவியின் உடல் எடின்பா்கில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

News image
சாண்ட்ரா எலிசபெத் சாஜு (22)
Updated On :30 டிசம்பர் 2024, 11:00 pm

Din

லண்டன்: ஸ்காட்லாந்தில் காணாமல் போன இந்திய மாணவியின் உடல் எடின்பா்கில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.

ஸ்காட்லாந்தில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த சாண்ட்ரா எலிசபெத் சாஜு (22) எனற மாணவியை கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அன்றிரவு லிவிங்ஸ்டன் பகுதியில் உள்ள கடை வழியாக அவா் சென்றுள்ளாா். அப்போது அவா் கருப்பு நிற முகக்கவசம் மற்றும் கருப்பு நிற குளிா்கால உடை அணிந்திருந்தாா். இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அவரைக் காணவில்லை என்பது தொடா்பாக நண்பா்கள் மற்றும் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், எடின்பா்கின் நியூபிரிட்ஜ் அருகே ஆற்றில் இருந்து அவருடைய உடல் கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

மாணவியின் அடையாளம் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாண்ட்ராவின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டில் படிக்கும் 633 இந்திய மாணவா்கள் இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா். அதிகபட்சமாக கனடாவில் 172 போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.