எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஹமாஸின் ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேல்

காஸாவில் தொடர் சோதனைகளை மேற்கொண்டுவரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸின் பயங்கர ஆயுதங்களையும், பல ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:40 am

DIN

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் கடல்வழி மற்றும் வான்வழிப் படையுடன் இணைந்து காஸாவில் உள்ள பல தீவிரவாதிகளின் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகத் தரைப்படை தெரிவித்துள்ளது. 

மேலும் காஸாவில் மற்ற பகுதிகளில் நடத்திய சோதனையில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு அவர்களை அழித்ததாகவும், ஏகே-47, வெடிகுண்டுகள் உள்பட பல பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

மேலும் இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளைக் கொன்றதாகவும் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பு தொடர்பான பல ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

கடந்த அக்டோபர் துவங்கிய போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.