மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஹமாஸ் பிடியிலிருந்து இரு பிணைக் கைதிகள் மீட்பு! இஸ்ரேல் அறிவிப்பு!

காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 பிப்ரவரி 2024, 3:43 am

காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்திய திடீர் தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து, கிபுட்ஸ் நிர் யிஷாக் என்ற இடத்திலிருந்து ஏராளமான பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிரிவினர் கடத்திச் சென்றனர்.

பெர்னாண்டோ சிமோன் மர்மன் (60), லூயி ஹர் (70) என்ற இருவர் மீட்கப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ரஃபா நகரின் தெற்கு எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டதாகவும் இருவருமே நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் பிடியிலுள்ள 136 பிணைக் கைதிகளில் இவர்களும் இருந்தனர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.