காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்திய திடீர் தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து, கிபுட்ஸ் நிர் யிஷாக் என்ற இடத்திலிருந்து ஏராளமான பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிரிவினர் கடத்திச் சென்றனர்.
பெர்னாண்டோ சிமோன் மர்மன் (60), லூயி ஹர் (70) என்ற இருவர் மீட்கப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ரஃபா நகரின் தெற்கு எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டதாகவும் இருவருமே நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.
ஹமாஸ் பிடியிலுள்ள 136 பிணைக் கைதிகளில் இவர்களும் இருந்தனர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.