தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஹமாஸ் பிடியிலிருந்து இரு பிணைக் கைதிகள் மீட்பு! இஸ்ரேல் அறிவிப்பு!

காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 பிப்ரவரி 2024, 3:43 am

DIN

காஸா பகுதியிலிருந்து இரு பிணைக் கைதிகளைத் திங்கள்கிழமை அதிகாலையில் மீட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்திய திடீர் தாக்குதலின்போது இஸ்ரேலுக்குள் புகுந்து, கிபுட்ஸ் நிர் யிஷாக் என்ற இடத்திலிருந்து ஏராளமான பொதுமக்களைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிரிவினர் கடத்திச் சென்றனர்.

பெர்னாண்டோ சிமோன் மர்மன் (60), லூயி ஹர் (70) என்ற இருவர் மீட்கப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ரஃபா நகரின் தெற்கு எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டதாகவும் இருவருமே நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஹமாஸ் பிடியிலுள்ள 136 பிணைக் கைதிகளில் இவர்களும் இருந்தனர் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.