நியூயார்க்கின் ப்ரான்க்ஸ் ரயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரயில் நிலைய பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.
ப்ரான்க்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் ஈடன் ஏவ் ரயில் நிலையத்தில் நேற்று(பிப்.12) மாலை 4.30 மணியளவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அதில் 34 வயதான நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நபர் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்!!

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


