அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களால் லெபனானில் பதற்றமான சூழல்!

லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

News image
- கோப்புப்படம் | ஏபி
Updated On :26 பிப்ரவரி 2024, 11:26 am

DIN

லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா-இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத படைக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்கள் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் ராணுவ ஆளில்லா விமானத்தை(டிரோன்) குறிவைத்து தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, லெபனானின் புடே மற்றும் பால்பெக் பகுதிகளிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று(பிப்.26) தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், லெபனானில் இருந்து இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதப் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோசவ் கேலண்ட் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா படையின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இதுவரை லெபனான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறி வந்த நிலையில், லெபனானின் உள்புறப் பகுதிகளில் புகுந்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியிருப்பது போர்ப் பதற்றத்தை அதிகரித்திருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.