காஸாவில் இஸ்ரேல் போர் குற்றங்களைச் செய்துவருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், பெண் குழந்தை ஒன்றை இஸ்ரேல் ராணுவத்தினர் கடத்திச்சென்றதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இஸ்ரேல், ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு கொடூரமான குற்றங்களைச் செய்துவருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம்' எனக் கூறியுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஹமாஸ் போரின் இன்றைய நிலை என்ன?
மேலும், ஆக்கிரமிப்பு செய்துள்ள ராணுத்தின் அதிகாரிகள் உடனடியாக அந்தக் குழந்தையை தேசிய பாலஸ்தீன அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அதிகாரி ஹரேல் இட்டாச், 'ஒரு வீட்டில் தாய், தந்தை இல்லாமல் தனியாக இருந்ததால் குழந்தையை ராணுவ வீரர்கள் கொண்டு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
குழந்தையின் பெற்றோர் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாகத் தெரிவித்திருந்தார். ஹரேல் போரில் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

