
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 92-ஆக உயா்ந்துள்ளது.
நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால், அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும் ஏற்பட்டது.
இஷிகாவாவில் 13 நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 370 நிவாரண மையங்களில் மொத்தம் 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா். இது தவிர பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 242 போ் மாயமாகியுள்ளளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையொட்டி உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புத் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.