வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இதுவரை ஹமாஸுக்கு சொந்தமான 700 ஏவுகணைத் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்.
Updated On :12 ஜனவரி 2024, 3:08 pm

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இதுவரை 700-க்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அனைத்து ஏவுகணைத் தளங்களும் ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து இஸ்ரேல் மக்களைப் பாதுக்காக்க நடவடிக்கைகள் எடுத்துவருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

காஸாவில் சோதனைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அழித்துள்ளது. இன்னும் தொடர்ச்சியான சோதனைகளை செய்துவருவதாக தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் கோலானி பிரிவு, காஸாவில் உள்ள இடுகாடு ஒன்றிற்குள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளைத் தகர்த்ததாகத் தெரிவித்துள்ளது.

இடுகாட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஏவுகனைகள் இஸ்ரேலைக் குறிவைத்து நின்றது குறிப்பிடத்தக்கது. 

காஸாவின் பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு பின்னாலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏவுகணைத் தளங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.