இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் 23,000-த்திற்கும் அதிகமான காஸா மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேலின் மீது தென்னாப்பிரிக்கா இனப்படுகொலை குற்றச்சாட்டை வைத்தது. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு நாள்களுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக, சர்வதேச நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளுக்கு உடனடி தீர்ப்பு என்பது இருக்காது. பல ஆண்டுகள் விசாரணை நடைபெறும். எனினும் இந்த வழக்கு, காஸாவில் போரை நிறுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பிக்குமா என்ற எண்ணம் உலகலாவிக் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 'போரை யாராலும் நிறுத்த முடியாது. சர்வதேச நீதிமன்றத்தால் கூட நிறுத்தமுடியாது' எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கடலில் ஏவப்பட்ட கணை: வடகொரியாவின் திட்டம் என்ன?
போர் நிறுத்தம் குறித்து எந்த ஆணைகளையும் சர்வதேச நீதிமன்றம் பிறப்பிக்காத நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் மதிக்கப்போவதில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் நெதன்யாகு.
கடந்த 2020-ல் உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்றளவும் போர் நிற்காதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

‘விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

