மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10 ஆயிரம் பேர் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்!

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

News image
ஐகான் ஆப் த சீஸ் | AP
Updated On :28 ஜனவரி 2024, 5:26 am

DIN

ஏறத்தாழ நான்கு கட்டடங்களை ஒன்று சேர்த்தது  போல இருக்கும், உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் தனது முதல் பயணத்தை மியாமி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை தொடங்கியுள்ளது.

ராயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த இந்தக் கப்பல் ஐகான் ஆப் த சீஸ் (கடல்களின் சின்னம்) எனப் பெயரிடப்பட்டது. இதன் ஒட்டுமொத்த நீளம் 1200 அடி.

தொடக்க விழாவில் லியோனல் மெஸ்ஸி | AP

தொடக்க விழாவில் லியோனல் மெஸ்ஸி | AP

ஏழு நாள்கள் தீவுகளுக்கு இடையில் சுற்றுலா மேற்கொள்ளும் சொகுசு கப்பலின் முதல் பயணத்தைத் தொடங்கிவைத்துள்ளார் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி.

இந்தக் கப்பல் 20 அடுக்குகளைக் கொண்டது. 7,600 பயணிகள் வரை இதில் பயணிக்க இயலும். கப்பலின் பணியாளர்கள் 2,350 உள்பட அனைவருக்குமான தங்கும் அறைகள் உள்ளன.

மேற்புற அடக்கில் நீர்ச்சறுக்கு விளையாட்டு அமைப்பு | AP

மேற்புற அடக்கில் நீர்ச்சறுக்கு விளையாட்டு அமைப்பு | AP

கப்பலுக்குள்ளேயே ஆறு நீர்ச்சறுக்கு விளையாட்டு இடங்கள், ஏழு நீச்சல் குளம், பனிச்சறுக்கு விளையாட்டுக்கான இடம், திரையரங்கம், 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி 900 நாள்கள் எடுத்ததாகவும் இதற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16,600 கோடி) செலவானதாகவும் ராயல் கரிபீயன் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் நீர்மமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்க கூடியது. முழுக்கவே சூழலியல்சார் பாதுகாப்பு கொண்டிருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தாலும் இயற்கை ஆர்வலர்கள் இந்தக் கப்பலில் பயன்படும் எல்என்ஜி, மீத்தேன் மாசுவை வெளியிடும் என எச்சரித்துள்ளார்கள்.

கப்பலின் உள்புற முகப்புகளில் ஒன்று | AP

கப்பலின் உள்புற முகப்புகளில் ஒன்று | AP

நிலத்தில் இருப்பதை விட எட்டு மடங்கு அதிகமான கார்பன் மாசுவை சுற்றுலாவாசிகள் ஏற்படுத்துவார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடலில் நடமாடும் நகரமாக விளங்கும் இந்த சொகுசு கப்பல் கப்பல் கட்டுமானத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.