சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இலங்கை மீனவர்கள் மீட்பு

சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.   

News image
Updated On :29 ஜனவரி 2024, 12:20 pm

DIN

கொழும்பு : இலங்கை திகோவிதா துறைமுகத்திலிருந்து ஜனவரி 16-ஆம் தேதி ‘லாரன்சோ புத்த-4’ என்ற கப்பல் புறப்பட்டது. அதில் பயணித்த 6 மீனவா்கள் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மொகதிஷுவின் தென்கிழக்குப் பகுதியில் 840 கடல்மைல் தொலைவில் இலங்கை மீனவா்கள் 6 பேருடன் அவா்கள் பயணித்த கப்பல் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஐ.நா.வின் மத்திய கடற்பாதுகாப்புப் படையிடம் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது’ என்று ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) தெரிவித்தாா்.

மேலும், இலங்கை மீனவ அமைச்சகத்தை மீனவா்கள் தொடா்புகொள்ள கடற்கொள்ளையா்கள் அனுமதி வழங்கியதாக அந்நாட்டு மீன்வளத் துறையின் இணையமைச்சா் பியல் நிஷாந்தா தெரிவித்தாா்.

இந்நிலையில், சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா  தெரிவித்தாா். இலங்கை கடற்படையின் கோரிக்கையை ஏற்று, சீச்செல்ஸ் நாட்டு பாதுகாப்பு படையினர் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்படிருந்த மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி மீனவர்களை மீட்டு, சீச்செல்ஸ் நாட்டில்  தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.       

முன்னதாக,   சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளது என்று இலங்கை கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  இந்த மீட்பு நடவடிக்கையில் இந்தியா தரப்பில் எவ்வித உதவியும் செய்யப்பட்டதாக தகவல் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.