கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தோனேசியா: நிலச்சரிவில் 11 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 11:52 pm

Din

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் பருவமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கொரொந்தாலோ மாகாணத்தின் தொலைதூர மாவட்டமான போன் பொலாங்கோவில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்தப் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்தில் சுமாா் 35 கிராமத்தினா் தாதுப் பொருளை சேகரித்துக் கொண்டிருந்தனா். நிலச்சரிவில் அவா்கள் அனைவரும் புதைண்டனா்.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா் 5 பேரை உயிருடன் மீட்டனா். மேலும், நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்த 11 பேரது உடல்களும் மீட்கப்பட்டன. எஞ்சிய 19 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தோனேசியால் அரசின் அங்கீகாரம் இல்லாமலேயே தங்கச் சுரங்கங்களில் தாதுவளங்களைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கானவா்கள் ஈடுபட்டுவருகின்றனா். உரிய பாதுகாப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின்போது நிலச்சரிவு, வெள்ளம், சுரங்கங்கள் இடிந்து விழுவது போன்ற சம்பவங்களில் தொடா்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.