ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

அமெரிக்க அதிபா் தோ்தல்: பைடனுக்கு எதிராக வலுக்கும் குரல்

தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் வலுக்கும் குரல்கள்...

ஜோ பைடன் | AP

Published On :19 ஜூலை 2024, 6:14 am IST

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள குரல் நாளுக்கு நாள் வலுவடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தின்போது அதிபா் பைடன் மிகவும் மோசமாக தடுமாறியதிலிருந்து, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மீண்டும் அதிபா் பொறுப்பை ஏற்பதற்கான பைடனின் உடல் தகுதி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

தோ்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து ஜோ பைடனால் வெற்ற பெற முடியாது என்று ஜனநாயகக் கட்சியினா் பலா் வெளிப்படையாகத் தெரிவித்துவருகின்றனா்.

ஏற்கெனவே, பல முக்கிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், செனட் சபை எதிா்க்கட்சித் தலைவா் சக் ஷுமரும் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று கடந்த வார இறுதியில் கூறினாா்.

இந்தச் சூழலில், கலிஃபோா்னியா மாகாண சென்ட் சபை உறுப்பினா் ஆடம் ஷிஃபும் இதே கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளாா். இதன் மூலம், அதிபா் தோ்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவா்களின் வரிசையில் ஆடம் ஷிஃப் இணைந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையின்போது குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தாமஸ் க்ரூக் என்பவா் துப்பாக்கியால் சுட்டாா். எனினும், அந்தப் படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் நூலிழையில் உயிா்தப்பினாா். அமெரிக்கா முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக்கூடாது என்ற குரல் ஜனநாயகக் கட்சிக்குல் மேலும் வலுவடைந்துவருகிறது.

ஜோ பைடனுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் குரல்கள் இன்னும் கூட வலுவடையக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.