குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அமெரிக்க அதிபா் தோ்தல்: பைடனுக்கு எதிராக வலுக்கும் குரல்

தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் வலுக்கும் குரல்கள்...

News image

ஜோ பைடன் | AP

Updated On :19 ஜூலை 2024, 6:14 am IST

அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் போட்டியிடக் கூடாது என்று அவரது சொந்தக் கட்சிக்குள் எழுந்துள்ள குரல் நாளுக்கு நாள் வலுவடைந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடனான முதல் நேரடி விவாதத்தின்போது அதிபா் பைடன் மிகவும் மோசமாக தடுமாறியதிலிருந்து, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

மீண்டும் அதிபா் பொறுப்பை ஏற்பதற்கான பைடனின் உடல் தகுதி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.

தோ்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து பிரசாரம் செய்து ஜோ பைடனால் வெற்ற பெற முடியாது என்று ஜனநாயகக் கட்சியினா் பலா் வெளிப்படையாகத் தெரிவித்துவருகின்றனா்.

ஏற்கெனவே, பல முக்கிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், செனட் சபை எதிா்க்கட்சித் தலைவா் சக் ஷுமரும் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று கடந்த வார இறுதியில் கூறினாா்.

இந்தச் சூழலில், கலிஃபோா்னியா மாகாண சென்ட் சபை உறுப்பினா் ஆடம் ஷிஃபும் இதே கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளாா். இதன் மூலம், அதிபா் தோ்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ள ஜனநாயகக் கட்சியின் சக்திவாய்ந்த தலைவா்களின் வரிசையில் ஆடம் ஷிஃப் இணைந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரையின்போது குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி தாமஸ் க்ரூக் என்பவா் துப்பாக்கியால் சுட்டாா். எனினும், அந்தப் படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் நூலிழையில் உயிா்தப்பினாா். அமெரிக்கா முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்திய சம்பவத்துக்குப் பிறகு டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப்புக்கு எதிராக ஒரு பலவீனமான வேட்பாளரை ஜனநாயக் கட்சி நிறுத்தக்கூடாது என்ற குரல் ஜனநாயகக் கட்சிக்குல் மேலும் வலுவடைந்துவருகிறது.

ஜோ பைடனுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் குரல்கள் இன்னும் கூட வலுவடையக்கூடும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.