அமெரிக்காவில் கடந்த மாதம் 356 நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டை விட அதிகமான அளவில் இருப்பதால், பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை விட 2024-ம் ஆண்டு மோசமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இண்டலிஜன்ஸ் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் 75 நிறுவனங்கள் திவாலானதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய மே மாதத்தின் 62-ஐ விட அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் கரோனா தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 74 நிறுவனங்கள் திவாலானதை விட தற்போது அதிகளவில் உள்ளதாகவும், நடப்பாண்டில் இதுவரை 356 நிறுவனங்கள் திவாலாகியுள்ளதாகவும், கடந்த 13 ஆண்டுகளில் இருந்ததை விட இது அதிகமானது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
’ஸோம்பி நிறுவனங்கள்’ என்பவை கடன்பட்ட வணிக நிறுவனங்களாகும். அவை வருமானத்தை உருவாக்கினாலும், இயங்கும் செலவுகள் மற்றும் நிலையான செலவுகள் (கூலி, கட்டணங்கள், வாடகை) ஆகியவற்றிற்கு செலவு செய்த பிறகு முழு கடனை கட்ட முடியாமல் தங்கள் கடன்களுக்கான வட்டியைச் செலுத்த போதுமான நிதியை மட்டுமே வைத்திருக்கும்.
உலகெங்கிலும் இந்த நிலையில் 7,000 நிறுவனங்கள் உள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 2,000 நிறுவனங்கள் அவ்வாறு இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொருளாதார நிலை குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் அதிகளவிலான நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்து வருகின்றன.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 4.1% அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார மந்தநிலை ஜூலை 2025-ம் ஆண்டு வரை தொடரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு இலக்கு

கடந்த ஆட்சியாளா்கள் 5 ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

கடந்த மாதம் தில்லியில் பீா் விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு: கலால் துறை தரவுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 68 யானைகள் உயிரிழப்பு: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





