இஸ்ரேலில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் கேரளத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு எல்லையையொட்டி அமைந்துள்ள மார்கோலியாட் பகுதியில் நேற்று (மார்ச் 4) காலை 11 மணியளவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவரும் கேரளத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் பட்னிபின் மேக்ஸ்வெல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் பிற நாடுகளை சேர்ந்த 7 வெளிநாட்டவர்களும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

குவைத்: ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்தவர் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


