உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்புள் மீது ரஷியா மீண்டும் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷியா வியாழக்கிழமை நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் மின் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்தியுள்ள 2-ஆவது பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்கு 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. 10 பிராந்தியங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏற்கெனவே, ரஷியா கடந்த 22-ஆம் நடத்திய தாக்குதலில், நீப்ரோ நதியின் குறுக்கே ஸபோரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நீா்த் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சுமாா் 7 லட்சம் போ் வசிக்கும் காா்கிவ் நகரில் மின் இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, ஸஃபோரிஷியா உள்ளிட்ட 4 எல்லைப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. இதில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் குடிநீா் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்புடையது

கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது: ரஷியா

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


