இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: லெபனானில் 4 பேர் பலி!

லெபனானில் டிரோன் தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்

லெபனான் எல்லையில் ஒரு காரின் மீது, இஸ்ரேல் டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக லெபனான் உள்நாட்டு பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள லெபனானிய கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழந்த நால்வர் ஹிஸ்புல்லா ஆயுத படையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

அக்.7 போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஈரானிய ஆதரவு படையான ஹிஸ்புல்லாக்களுக்குமே இடையே மோதல் வெடித்து வருகிறது.

இதுவரை லெபனானில் 275 ஹிஸ்புல்லா படையினர் உள்பட 350 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 15 ராணுவ வீரர்கள், 10 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

வெளிநாட்டு அதிகாரிகள் லெபனானுக்கு கடந்த சில மாதங்களாக அமைதி பேச்சுவார்த்தைக்காக வந்தவண்ணம் உள்ளனர். ஹிஸ்புல்லா படையினர், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும்வரை சண்டை ஓயாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com