காஸாவில் இன்னும் 7 மாதங்களுக்குப் போர் தொடரும்: இஸ்ரேல் எச்சரிக்கை!
காஸாவில் இன்னும் 7 மாதங்கள் போரிட இஸ்ரேலின் திட்டம்!


காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஏழு மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மக்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள ராஃபாவில் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை விரிவாக்கியதையடுத்து அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர்.
காஸா நகரின் மத்தியில் முதல்முறையாக டாங்கிகளும் இஸ்ரேலின் தளவாடங்களும் தென்பட்ட நிலையில் இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தாச்சி ஹனேபி, “2024-ம் ஆண்டின் 5-வது மாதத்தில் இருக்கிறோம். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத்களின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை முற்றிலும் அழிக்கும் இலக்கை அடைய இன்னும் கூடுதலாக 7 மாதங்கள் போரிட வேண்டியிருக்குமென எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம்
சர்வதேசளவிலான அழுத்தத்தையும் மீறி ராஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் தொடர்புடைய படங்களும் விடியோக்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகின.
குறைந்தது 45 பேர் பலியானதும் 200-க்கும் அதிகமானோர் காயமுற்றதும் அந்த தாக்குதலில் . ராஃபாவை ஹமாஸி கடைசி கோட்டையென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
காஸா- எகிப்து எல்லையை முழுமையாக கைப்பற்றியுள்ள இஸ்ரேல் ராணுவம் ராஃபாவிலும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக ராஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதே போரின் இறுதி கட்டமாக இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...