மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 34 பேர் பலி; 84 பேர் காயம்

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
பெய்ரூட் கட்டடத்தின் மீது தாக்கிய இஸ்ரேல் ஏவுகணை- AP
Updated On :24 நவம்பர் 2024, 3:37 am

DIN

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 84 பேர் பலியானதாகவும் குறிப்பிட்டுள்ளது.

லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு லெபனானில் நேற்று (நவ. 23) இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகினர். 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பால்பெக் ஹர்மெல் நிர்வாகத்துக்குட்பட்ட 6 கிராமப் பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதேபோன்று தெற்கு லெபனானில் உள்ள நபாடிஹ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. டயர் மற்றும் மர்ஜியோர் பகுதிகளில் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதோடுமட்டுமின்றி தெற்குப் பகுதிகளில் உள்ள கஹிம், ஹனிதா, கிப்புட்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

தெற்கு லெபனானின் அல் பய்யடா எல்லைப் பகுதிகளில் நுழையும் வகையில் இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் எல்லைகளின் மீது ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் உள்ள லெபனான் பகுதிகளின் மீது இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.