அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளிப் பேருந்தில் பற்றிய தீ : 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம்!

பாங்காக்கில் நேரிட்ட பள்ளிப் பேருந்து தீ விபத்தில் 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 10:48 am

DIN

பாங்காக்: தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஆசிரியர்கள் மற்றும் இளம் மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதில், அதிலிருந்த 25 மாணவர்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

பேருந்தில் திடீரென பயங்கர தீ பரவிய நிலையில், அதிலிருந்த 25 பேரும் பலியாகியிருக்கலாம் என்று அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மத்திய உத்தை தானியிலிருந்து பாங்காக் நோக்கி பள்ளிப் பேருந்து சுற்றுலா சென்று கொண்டிருந்ததாகவும், இதில் 44 பேர் இருந்ததாகவும், பதும் தானே மாகாணத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீ பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் இறந்திருக்கக் கூடும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 25 மாணவர்கள் வரை இறந்திருக்கலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

சம்பவ இடத்திலிருந்து மீட்புப் பணிகளை பல துறை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகிறார்கள். பேருந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியும் விடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

பேருந்தில் பயணித்த மாணவர்களின் வயது மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

பேருந்தின் டயர் வெடித்ததில், தீ விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், அந்த பேருந்திலிருந்து குறைந்தது 10 பேரின் உடல்களை மீட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.