ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கதேசத்தில் துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ஹிந்து கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சனிக்கிழமை நேரில் சென்றாா்.

News image
தாகேஸ்வரி தேசிய கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற துா்கை பூஜை விழாவில் பங்கேற்று பேசிய அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ்.
Updated On :12 அக்டோபர் 2024, 10:30 pm

Din

வங்கதேசத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அங்குள்ள ஹிந்து கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சனிக்கிழமை நேரில் சென்றாா்.

வங்கதேசத்தின் மொத்த மக்கள்தொகை 17 கோடி. இதில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை சுமாா் 8 சதவீதமாகும். அந்நாட்டில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போதும், அவா் பதவி விலகிய பிறகும் அங்கு ஹிந்துக்களின் சொத்துகள், வியாபார தலங்கள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் பழைய டாக்கா பகுதியில் உள்ள தாந்தி பஜாரில் துா்க்கை பூஜை மண்டபம் மீது சிலா் பெட்ரோல் குண்டு வீசினா். அந்த குண்டு விழுந்து தீப்பிடித்ததில் சுமாா் 5 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தாந்தி பஜாா் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ள நூற்றாண்டுகள் பழைமையான தாகேஸ்வரி தேசிய கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சனிக்கிழமை நேரில் சென்றாா். அங்கு துா்கை பூஜை பண்டிகையையொட்டி ஹிந்து சமூகத்தினருக்கு அவா் வாழ்த்துத் தெரிவித்தாா். அந்நாட்டைச் சோ்ந்த ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதி செய்யும் வகையில், வங்கதேசத்தை கட்டமைக்க விரும்புவதாக கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் தெரிவித்தாா்.

கடந்த அக்.1 முதல் வெள்ளிக்கிழமை வரை, வங்கதேசத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களையொட்டி நடைபெற்ற 35 அசம்பாவிதங்கள் தொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டு, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்தது.

துா்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கும், அந்நாட்டின் சாத்கிரா பகுதியில் ஜெஷோரீஸ்வரி காளி கோயிலுக்குப் பிரதமா் மோடி பரிசளித்த கிரீடம் திருடப்பட்ட சம்பவத்துக்கும் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், அவா்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாப்பாக இருப்பதை வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் வலியுறுத்தப்பட்டது.