ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டிஜிட்டல் திரைகளைப் பார்க்க 2 வயது குழந்தைகளுக்குத் தடை: எந்த நாட்டில்?

டிஜிட்டல் திரைகளைப் பார்க்க 2 வயது குழந்தைகளுக்குத் தடை விதித்துள்ளது ஸ்வீடன்

News image

செல்போன் அடிமைகள்

Updated On :3 செப்டம்பர் 2024, 11:14 am

தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ எதையும் 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

13 வயது முதல் 18 வயது வரையிலானோர் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் சுகாதாரத் துறை குறிப்பிட்டிருக்கிறது.

அதிக நேரம் குழந்தைகளை தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க விடுவதால், அது அவர்களது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி விடுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள 13 முதல் 16 வயதுடைய இளம் தலைமுறை பிள்ளைகள் ஒரு நாளைக்கு 6 முதல் அதற்கும் அதிகமான நேரம் செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூகத்துடன் இணையாமல், உடல் இயக்கம் இல்லாமல், மற்றவர்களுடன் பேசாமல் இவர்கள் வாழ்வது மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டால், இளைஞர்களின் உறங்கும் நேரம் குறைவதாகவும், நாட்டிர்ல உள்ள 15 வயது சிறார்களில் பாதிக்கு மேல் போதுமான தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.

குழந்தைகள் உறங்கும் போது செல்போன் பார்ப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், படுக்கை அறைக்குள் செல்போன் கொண்டு செல்வதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்வீடன் நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது.

முன்னதாக, துவக்கப் பள்ளிகளில், மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதைத் தடை செய்ய ஸ்வீடன் அரசு திட்டமிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.