திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உலகின் முதல் டிரில்லியனர் யார் தெரியுமா? 2-வது அதானி!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக (ஒரு லட்சம் கோடி டாலர்) இருப்பார் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

News image

கோப்புப்படம் - Center-Center-Kochi

Updated On :10 செப்டம்பர் 2024, 2:55 pm IST

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக (ஒரு லட்சம் கோடி டாலர்) ஆவார் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

துபாயை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபார்மா கனெக்ட் அகாடமி உலகின் பணக்காரர்கள் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வருகிற 2027 ஆம் ஆண்டு, உலகின் முதல் டிரில்லியனராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரை(ஒரு ட்ரில்லியன் டாலர்) எட்டும். இந்திய மதிப்பில் தோராயமாக 83 லட்சம் கோடி ரூபாய்.

ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டின்படி, அவரது ஆண்டு சொத்து மதிப்பு 110%-க்கும் மேல் அதிகரித்து வருகிறது.

அடுத்ததாக, கௌதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது டிரில்லியனாக மாறுவார் என்றும் அவரது சொத்து மதிப்பு 123% என்ற அளவில் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், எல்விஎம்ஹெச் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் போன்ற பிற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 2030 ஆம் ஆண்டளவில் டிரில்லியன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டி 1.19 டிரில்லியன் டாலர் (ரூ. 99.86 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் பார்ச்சூன் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹூரூன் இந்தியா பட்டியலின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாவதாகத் தெரிவிக்கிறது. 1,539 பேர் ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர். இதற்கிடையில், புளூம்பெர்க் குறியீட்டின்படி, அம்பானி 111 பில்லியன் டாலர்(9 லட்சம் கோடி ரூபாய்), அதானி 99.6 பில்லியன் டாலர்(8.26 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.