ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தலிபான் ஆட்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.

News image
ஆப்கனில் போலியோ தடுப்புப் பணி நிறுத்தம்
Updated On :16 செப்டம்பர் 2024, 10:41 pm

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தலிபான் ஆட்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.

அந்த நாட்டில் போலியோ தடுப்பு முகாமை இந்த மாதம் தொடங்க ஐ.நா. திட்டமிட்டிருந்தது. எனினும், அந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்னரே போலியோ தடுப்புப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா். எனினும், அந்த முடிவுக்கான காரணம் குறித்து அவா்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

குழந்தைகளைத் தாக்கி ஊனமாக்கும் போலியோ தொற்று உலகின் பிற பகுதிகளில் ஒழிக்கப்பட்டாலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் மட்டும் இன்னமும் பரவிவருகிறது.

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது அவா்களின் இனப் பெருக்கத் திறனை அழிப்பதற்கான மேலை நாடுகளின் சதி என்று சில மத அடைப்படைவதாக் குழுக்கள் கருதுவதால் பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாா் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடா்கின்றன.

எனினும், ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம்களை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கு தலிபான்கள் அனுமதி அளித்துவந்தனா். ஆனால் அந்தப் பணிகளை நிறுத்திவைத்துள்ளதாக அவா்கள் தற்போது திடீரென அறிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.