மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு; விரைவில் வாக்கு எண்ணிக்கை!

இலங்கையில் இன்று காலை தொடங்கிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

News image

இலங்கை அதிபர் தேர்தல்

Updated On :21 செப்டம்பர் 2024, 12:15 pm

கொழும்பு: இலங்கையின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நிறைவு பெற்றது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மந்தமான வாக்குப்பதிவு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் உள்பட இதுவரை இல்லாத அளவில், அதுவும் அதிபருக்கான தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்காக 13,421 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று அமைதியான முறையில் நிறைவு பெற்றது.

வாக்காளர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள்தான் என்ற போதும், போட்டியிட்ட 38 பேரில் ஒருவர் கூட பெண் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற தேர்தலில் எங்கும் எந்த வன்முறையும் இன்றி நடைபெற்று முடிந்ததாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற ஒரு சில மணி நேரங்களில் அதாவது மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 அல்லது 3 மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று கொழும்பு நகர தேர்தல் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், ஒரே ஒருவருக்கு வாக்களிப்பதற்கு மாறாக, தரவரிசையில் தேர்வு செய்யும் முறை உள்ளது. அதாவது ஒரு வாக்காளர், தாங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது என வரிசைப்படுத்தி வாக்களிக்கலாம்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பெறுவோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பிறகு, வெளியேற்றப்பட்டவர்களுக்கு கிடைத்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது யாருக்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்களோ, அதன் அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.