விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

121 அடையாளம் தெரியாத கல்லறைகள்

அமெரிக்காவின் விமானப்படை தளத்தில் இந்தக் கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

News image

மாதிரி படம் | Pexels

Updated On :20 ஜனவரி 2024, 8:52 am IST

ப்ளோரிடாவின் தம்பா பகுதியில் அமெரிக்க விமான படையின் தளத்தில் அமைந்துள்ள முன்னாள் கறுப்பினர்களுக்கான கல்லறை பகுதியில் நடந்த அகழாய்வில் 121 அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேக்டில் விமான படையின் தளத்தில் மேலோட்டமான அகழாய்வு, கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில் 121 கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மெக்டில் விமான படை அதிகாரிகள் தம்பா வளைகுடா வரலாற்று மையத்துக்கு 2019-ல் அந்தப் பகுதியில் கறுப்பின கல்லறை இருப்பதற்கான தகவலைக் கொடுத்தனர். அதனடிப்படையில் 2021-ல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

“கடந்த காலத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். இப்போது சமூகமாக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்” என ராணுவ தளத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா ஆண்டர்சன் தெரிவித்தார்.

மேலும், அதிகாரிகள் தேடுதல் பகுதியை விரிவடைய செய்யவிருப்பதாகவும் தளத்தை எவ்வாறு சிறந்த முறையில் ஆவணம் செய்வது மற்றூம் மரியாதை செலுத்துவது என்பது குறித்து சமூகத்தினருடன் கலந்து யோசிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.