சீனாவில், குவாங்டாங் மாகாணத்தில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தின், சாவோனன் மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டத்தில் இன்று (டிச. 9) இரவு 9.20 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் ஏராளமான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஹாங்காங்கில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Summary
Twelve people have died in a fire at a residential building in Guangdong province, China.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கோவிந்த்புரி கட்டடத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு: இருவா் படுகாயம்

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!

பெங்களூர் தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



