சான்டா: அமெரிக்காவின் 14 மாகாணங்களைச் சேர்ந்த அரசு வழக்குரைஞர்கள், அமெரிக்காவின் மிக முக்கிய அரசுத் தகவல்களை எலான் மஸ்க் மற்றும் அவரது அரசு செயல்திறன் துறை கையாள்வதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, அமெரிக்க அரசின் செயல்திறன் துறையின் தலைமையில் எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் செனட் அவையால் உறுதிசெய்யப்பட்ட அதிகாரியால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது காங்கிரஸ் அவை மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை வரையறுக்கும் அரசியலமைப்பு விதிகளின்படி வலியுறுத்தப்படுகிறது.
அமெரிக்க செயல்திறன் துறைக்கு வெளியே நிர்வாகப் பிரிவின் கீழ், எலான் மஸ்க், யார் ஒருவருக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தடை விதிக்க வேண்டும், அவரது நடவடிக்கைகள் எதற்கும் சட்டப்பூர்வ தாக்கம் இல்லை என்றும் உத்தரவிடுமாறு அரசு வழக்குரைஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் மிக முக்கிய தகவல்களை, சட்டப்பூர்வ அனுமதியற்ற அமைப்புகள் மூலம் கையாள்வது மற்றும் அதிகாரப்பூர்வம் இல்லாதவர்கள் மூலம் கையாள்வதையோ எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க செயல்திறன் துறை மேற்கொள்ளாத வகையில் தடை உத்தரவுப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பிறப்பிக்கும் உத்தரவுகள், நடவடிக்கைகள் மதிப்பற்றவை என்று அறிவிக்கவும், உத்தரவுகள் பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மிக்ஸிகன் அரசு பொது வழக்குரைஞர் டானா நெஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசு செயல்திறன் துறை ஆகியவை சட்டத்தை மீறுவதாகக் கூறி வழக்குகள் குவிந்து கொண்டிருக்கும் அதே வேளையில், எலான் மஸ்க் மற்றும் குழுவினர் ஏஜென்ஸி ஏஜென்ஸியாக அலைவதாகவும் கணினி அமைப்புகளை ஊடுருவுவதாகவும் வரவு-செலவுத் திட்டங்களைத் தேடி, அவற்றை குப்பை, மோசடி மற்றும் துஷ்பிரயோகம் என்று கூறுவதையும் எதிர்த்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் இணையம் வழியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு: தரவுகள் பதிவேற்றம் தொடக்கம்
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!
ரூ. 940 லட்சம் கோடி சம்பாதிப்பது சாத்தியம்தான்: எலான் மஸ்க்
அம்பானி வாழ்நாள் சொத்துமதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த எலான் மஸ்க்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



