ரோம்: மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், வாடிகன் வெளியிட்ட தகவலில், பரிசோதனை முடிவுகள், எக்ஸ்ரே முடிவுகள் உள்ளிட்டவை, புனித போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமாக இருப்பதைக் காட்டுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ், இறைவனின் நல்லாசியுடன், நாள் முழுவதும் சற்று ஓய்வெடுத்தார், பிரார்த்தனை மேற்கொண்டார். அவ்வப்போது புத்தகங்களை வாசித்தார். இந்த நேரத்தில் அவருக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனைகள் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் என்று ஊடகப் பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.
உடல்நிலை மோசமடைந்திருந்தாலும், அவரது மனநிலை உற்சாகத்தை இழக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சந்தேகத்துக்குரிய வெளிநாட்டவா்கள் குறித்து தகவல்: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!

செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



