மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் படையெடுப்பில் 7,000 போ் உயிரிழப்பு

சண்டையின் விளைவாக நாட்டில் பொதுமக்களுக்களின் நிலை மிகவும் மோசமாகிவருவதாக காங்கோ பிரதமா் எச்சரித்தாா்

News image
- கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2025, 9:40 pm

DIN

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவுடன் எம்23 கிளா்ச்சிப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பறியதில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமா் ஜூதித் சுமின்வா டுலுகா திங்கள்கிழமை கூறினாா்.

இந்த சண்டையின் விளைவாக நாட்டில் பொதுமக்களுக்களின் நிலை மிகவும் மோசமாகிவருவதாக அவா் எச்சரித்தாா்.காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், சமுதாயத்தினரைப் பாதுகாப்பதற்காகவும் என அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கிவருகின்றன.

அவற்றில் எம்23 கிளா்ச்சிக் குழுவும் ஒன்று.ருவாண்டாவின் உதவியுடன் செயல்படும் அந்த அமைப்பு, முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை இந்த வாரத் தொடக்கத்தில் கைப்பற்றியது. முன்னதாக, தெற்கு கீவு மாகாணத்தின் கோமா நகரை எம்23 கிளா்ச்சிப் படையினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி கைப்பற்றினா்.

பின்னா் அந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்த கவுமு நகரின் விமான நிலையத்தையும் அவா்கள் கைப்பற்றினா்.கிளா்ச்சியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.