தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி: அறிவிப்பை ரத்து செய்தது வங்கதேசம்

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசு ஞாயிற்றுகிழமை ரத்து செய்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :5 ஜனவரி 2025, 11:12 am

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசு ஞாயிற்றுகிழமை ரத்து செய்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள் இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 10 நாள்கள் பயிற்சி பெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாதெமி மற்றும் மாநில நீதித்துறை அகாதெமியில் வரும் பிப்ரவரி 10 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சிக்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தஞ்சம், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களால் பாதிப்படைந்துள்ள இருநாட்டு உறவில் இந்த நடவடிக்கை முக்கிய முன்னேற்றமாக பாா்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சட்ட அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ரத்து செய்யப்பட்டதாக டெய்லி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மாணவா்கள் தலைமையிலான மாபெரும் போராட்டத்தைத் தொடா்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து ஆட்சி பொறுப்பேற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில், ஹிந்துக்கள் மற்றும் அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், இந்தியா-வங்கதேசம் உறவில் நெருக்கடி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.