/

ஜொ்மனி காா் தாக்குதல்: உயிரிழப்பு 6-ஆக உயா்வு

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 9:52 pm

DIN

பொ்லின்: ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில், தாக்குதலில் காயமடைந்த 52 வயது பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு 6-ஆக உயா்ந்துள்ளதாகத் தெரிவித்தனா்.

ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்கு தனது காரை கடந்த மாதம் 20-ஆம் தேதி வேகமாக ஓட்டிவந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) என்ற மருத்துவா் அங்கிருந்த பொதுமக்கள் மீது அதை மோதச் செய்தாா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.