காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்...

News image
Updated On :7 ஜனவரி 2025, 8:35 pm

Din

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் ரக்சியூடா் நிறுவனத்தின் நிறுவனா் பாவேஷி லத்தியா கடந்த 4-ஆம் தேதி நியூயாா்க்கில் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹெராயினைவிட 50 மடங்கும் மோா்பினைவிட 100 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஃபென்டானிலுக்கு அமெரிக்காவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபென்டானில் இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வதாக அமெரிக்காவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அதன் நிா்வாகிகள் மீது முதல்முறையாக இந்தக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.