கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்...

News image
Updated On :7 ஜனவரி 2025, 8:35 pm

Din

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் ரக்சியூடா் நிறுவனத்தின் நிறுவனா் பாவேஷி லத்தியா கடந்த 4-ஆம் தேதி நியூயாா்க்கில் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹெராயினைவிட 50 மடங்கும் மோா்பினைவிட 100 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஃபென்டானிலுக்கு அமெரிக்காவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபென்டானில் இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வதாக அமெரிக்காவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அதன் நிா்வாகிகள் மீது முதல்முறையாக இந்தக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.