கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்திற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பைக் கொண்டாடும் காஸா மக்கள்

Updated On :16 ஜனவரி 2025, 4:51 pm

DIN

இஸ்ரேல் - காஸா இடையே நடைபெற்று வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த 15 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா இடையிலான போர் காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் முழுமையாக ஒப்புதல் அளித்ததால் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வருகிற ஞாயிறு (ஜன. 19) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் ஆறு வார ஆரம்பக்கட்ட போர் நிறுத்தம், இஸ்ரேலிய படைகள் காஸாவில் இருந்து திரும்பப் பெறப்படுதல், இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுதல் போன்ற ஒப்பந்தங்கள் இருதரப்பிலும் ஏற்கபட்டுள்ளன.

இந்தப் போரால் 46,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் தொலைத்துள்ளனர்.

போர்நிறுத்தம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், "காஸாவில் பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் காஸா மக்களுக்கு பாதுகாப்பான, நிலைத்த மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.