கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வெடித்துச் சிதறிய ராக்கெட்! பதறாத எலான்!

எரிபொருள் கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்பேஸ்எக்ஸ் சந்தேகம்

விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் - AP

Published On :

எலான் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது நிறுவனத்தின் ஏழாவது சோதனையாக, 10 மாதிரி செயற்கைக்கோள்களோடு ஸ்டார்ஷிப் விண்கலம் வியாழக்கிழமை இரவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப்பின் பூஸ்டர் பகுதி பிரிந்து, திட்டமிட்டபடி ஏவுதளத்தால் பிடிக்கப்பட்டது. ஆனால், பறக்கத் தொடங்கிய ஸ்டார்ஷிப் விண்கலம், சுமார் 8.5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததுடன், வெடித்தும் சிதறியது.

இருப்பினும், இந்த விபத்து குறித்து எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, ``வெற்றி நிச்சயமற்றது; ஆனால், பொழுதுபோக்கு உறுதி’’ என்று தன்னம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விண்ணில் வெடித்துச் சிதறிய விண்கலத்தின் பாகங்களால் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அவ்வழியாகச் செல்லவிருந்த சுமார் 20 விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டன.

எரிபொருள் கசிவால்தான் இந்த விபத்து நேர்ந்திருக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.