போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.

Updated On :23 ஜனவரி 2025, 4:58 am IST

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக மார்கோ தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேசினர்.

புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய, அமெரிக்கா உறவை மேலும் வலிமையாக்குவதற்கான வாய்ப்புகள், இந்திய-பசிபிக் பிராந்தியத்தை மேலும் தடையற்றதாக்குதல், பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவும், அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம் செலுத்தவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக மார்கோ தெரிவித்தார்.

'க்வாட்' அமைச்சர்கள் கூட்டம்: மார்கோ- ஜெய்சங்கர் சந்திப்புக்கு முன்பாக வாஷிங்டனில் 'க்வாட்' கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அந்த அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமுக நிலையை வலுக்கட்டாயமாக மாற்றும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையும் (இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அடாவடி போக்கு மறைமுகமாக விமர்சிக்கப்பட்டது) 'க்வாட்' கூட்டமைப்பு வலுவாக எதிர்க்கிறது.

பிராந்திய கடல்சார், பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நம்பகமான மற்றும் வலிமையான விநியோக முறைகளை மேம்படுத்துவதிலும் 'க்வாட்' உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குடியுரிமை கட்டுப்பாடு: இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிர்ப்பு

வாஷிங்டன், ஜன. 22: அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என்ற அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எம்.பி. ரோ கன்னா கூறியதாவது: அதிபர் டிரம்ப்பின் உத்தரவு ஹெச்-1பி, ஹெ-2பி போன்ற விசாக்களை பெற்று அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணியாற்றும் வெளிநாட்டவரின் குழந்தைகளையும் பாதிக்கும் என்றார்.

எம்.பி. ஸ்ரீ தானேதர் கூறுகையில், 'பிறப்புரிமை குடியுரிமை அமெரிக்காவின் சட்டமாக எப்போதும் இருக்கும். அந்த நிலையைப் பாதுகாக்க நான் போராடுவேன்' என்றார்.

எம்.பி. பிரமிளா ஜெயபால் கூறுகையில், 'பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்வது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த உத்தரவு அமெரிக்க சட்டங்களை கேலிக்கூத்தாக்கும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.