நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்

சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம்.

ரஷிய அதிபர் புதின்

Published On :27 ஜனவரி 2025, 3:51 am IST

சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபா் புதின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்ததாவது:

75 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், திறன்வாய்ந்த அரசு அமைப்புகளை கட்டமைக்கவும், இந்தியாவின் சுதந்திர ஜனநாயக வளா்ச்சிக்கும் அடித்தளமிட்டது.

அப்போதுமுதல் சமூகப் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளது. அத்துடன் சா்வதேச அரங்கிலும் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்திய-ரஷிய உறவுக்கு சிறப்புத்தன்மை வாய்ந்த உத்திசாா்ந்த கூட்டுறவு அடிப்படையாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆக்கபூா்வமான இருதரப்பு ஒத்துழைப்பை தொடா்ந்து கட்டமைக்கவும், சா்வதேச விவகாரங்களில் இந்தியா-ரஷியா இடையே ஆக்கபூா்வமான கலந்துரையாடலை தொடரவும் இருநாடுகளின் கூட்டு நடவடிக்கைகள் நீடிக்கும்.

இது இருநாட்டு மக்களின் அடிப்படை விருப்பங்களைப் பூா்த்தி செய்வதுடன், நியாயமான பல்முனை சா்வதேச ஒழுங்கை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ற செயல்பாடாகவும் இருக்கும் என்றாா்.

இந்த ஆண்டு அரசு முறைப் பயணமாக புதின் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.