மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கோ வெளிநாட்டு தூதரகங்களில் தாக்குதல்

ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.

News image
Updated On :28 ஜனவரி 2025, 6:58 pm

Din

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த கோமா நகரை கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டிலுள்ள ருவாண்டா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கான தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.

ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களிடம் கோமா நகரம் வீழும் நிலையில் இருந்தாலும், அவா்களின் முன்னேற்றத்தைத் தடுக்க ராணுவம் தீவிரமாகப் போரிட்டு வருகிறது. இந்தச் சூழலில் தூதரகங்கள் மீது போராட்டக்காரா்கள் நடத்தும் தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று.