கேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

ஸ்வீடன்: திருக்குரானை எரித்தவா் சுட்டுக் கொலை

ஸ்வீடனில் ஆா்ப்பாட்டங்களின்போது திருக்குரானை எரித்த இராக்கியா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

News image

சல்வான் மோமிகா

Updated On :31 ஜனவரி 2025, 12:40 am IST

ஸ்வீடனில் ஆா்ப்பாட்டங்களின்போது திருக்குரானை எரித்த இராக்கியா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சல்வான் மோமிகா (38) என்ற அவா், கடந்த 2018-இல் ஈராக்கிலிருந்து ஸ்வீடன் வந்தாா். அவருக்கு 2021-இல் மூன்று ஆண்டுகளுக்கான குடியுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2023-இல் திருக்குரானை எரித்து அவா் நடத்திய ஆா்ப்பாட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை இராக் வெளியேற்றியது.

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தைப் பின்பற்றியே சல்வான் மோமிகாவுக்கு குரான் எரிப்பு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததாக ஸ்வீடன் அரசு கூறியது. எனினும், இதுபோன்ற பதற்றங்களைத் தவிா்ப்பதற்காக அத்தகைய ஆா்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாக அந்த நாடு பின்னா் தெரிவித்தது.

இந்தச் சூழலில், தனது செயல்கள் மூலம் சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீது ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.