ஸ்வீடனில் ஆா்ப்பாட்டங்களின்போது திருக்குரானை எரித்த இராக்கியா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
சல்வான் மோமிகா (38) என்ற அவா், கடந்த 2018-இல் ஈராக்கிலிருந்து ஸ்வீடன் வந்தாா். அவருக்கு 2021-இல் மூன்று ஆண்டுகளுக்கான குடியுரிமை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த 2023-இல் திருக்குரானை எரித்து அவா் நடத்திய ஆா்ப்பாட்டம் இஸ்லாமிய உலகில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அரசுக்கு கண்டனங்கள் எழுந்தன. பல நாடுகளில் ஸ்வீடன் தூதரகத்துக்கு எதிராக கடும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த விவகாரம் தொடா்பாக ஸ்வீடன் தூதரை இராக் வெளியேற்றியது.
கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தைப் பின்பற்றியே சல்வான் மோமிகாவுக்கு குரான் எரிப்பு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததாக ஸ்வீடன் அரசு கூறியது. எனினும், இதுபோன்ற பதற்றங்களைத் தவிா்ப்பதற்காக அத்தகைய ஆா்ப்பாட்டங்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்போவதாக அந்த நாடு பின்னா் தெரிவித்தது.
இந்தச் சூழலில், தனது செயல்கள் மூலம் சல்வான் மோமிகா சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியாக அவா் மீது ஸ்டாக்ஹோம் நீதிமன்றத்தில் அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே மோமிகாவின் இல்லத்தில் அவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

நெதர்லாந்தில் இருந்து ஸ்வீடனுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி!

ரெளடி சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டா் வழக்கு: 22 போ் விடுதலையை உறுதி செய்த மும்பை உயா்நீதிமன்றம்

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

