மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துபையில் வீடு வாங்க வேண்டுமா? விலை பற்றிய நிலவரம்

துபையில் நடுத்தர வீடுகள் விற்பனையாகி வருகிறது. விலை நிலவரம் பற்றி

News image
வீடு விலை நிலவரம்
Updated On :9 ஜூலை 2025, 9:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அல்லது துபையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கான விலை நிலவரம் வெளியாகியிருக்கிறது.

துபையிலிருந்து வெளியாகும் ஊடகத் தகவல்களின்படி, துபையில், ஒரு படுக்கை வசதி கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால், ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த குடியிருப்பு, மிக முக்கியப் பகுதியில் அமைய வேண்டும், வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப விலை மாறுபடுமாம்.

துபை அறிவியல் பூங்கா அல்லது துபைலாண்ட் பகுதியில், ஒருவர் நடுத்தரமான வீடு வாங்க வேண்டும் என்றால் ரூ.1.8 கோடி முதல் ரூ.2.3 கோடி வரை இருக்கும் என்கிறது ஊடகத் தகவல்கள்.

அதுவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான துபை மரினா அல்லது ஜூமெய்ரா கடற்கரைக்கு அருகே வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆகும். அதுவும் நடுத்தரமான வீடுதான்.

சரி.. புர்ஜ் கலிஃபா அருகே ஒரு படுக்கை வசதிகொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.3.75 கோடியாகும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மற்றும் வீட்டில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, வீட்டில் விலை தாறுமாறாக உயரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கோல்டன் விசா

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா தொடர்பான விதிமுறைகளில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றம் நாட்டின் குடியிருப்புகளுக்கான நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு குடிமக்கள் 1,00,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ.23.3 லட்சம்) நிலையான தொகையை செலுத்துவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் துபையில் வாழும் அனுமதியைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.