சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட வீரர்கள் அனைவரும் திங்கள்கிழமையில் பூமி திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 26-ஆம் தேதியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இவர்கள் ஜூலை 14 ஆம் தேதியில் பூமி திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
17 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு, இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு பூமி திரும்புகையில் கடலில் டிராகன் விண்கலம் விழும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களின் வருகையின்போது, உற்சாக வரவேற்பு அளிக்கவும் நாசா திட்டமிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையல் சென்றுள்ள இந்தக் குழுவில் இந்திய விமானப்படையின் அனுபவம் வாய்ந்த சுபான்ஷு சுக்லாவும் உள்ளார். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப்பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின.
அவர்கள் சென்றிருக்கும் இந்த 14 நாள் ஆய்வுப் பயணத்தில், இஸ்ரோ வடிவமைத்த 7 மைக்ரோகிராவிட்டி ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டது.
பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறே, இரண்டு குழுவினரும் இணைந்து, 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை முடித்து, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுமார் 230-க்கும் மேற்பட்ட சூரிய உதயங்களை இவர்கள் பார்த்துள்ளனர்.
Summary
Shubhanshu Shukla, Ax-4 crew to leave International Space Station on July 14
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்தோனேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு!

சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் காற்று கசிவு: வீரா்களை வெளியேறத் தயாா்ப்படுத்திய நாசா
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



