இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஒரே நேரத்தில் லெபனான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்!

லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

News image
தாக்குதலுக்குத் தயாராகும் பீரங்கி- AP
Updated On :15 ஜூலை 2025, 1:47 pm

இணையதளச் செய்திப் பிரிவு

லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவு அளித்துவரும் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம் சர்வாதிகாரியான பாஷர் - அல்- ஆசாத்தின் ஆட்சியை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்ததைத் தொடர்ந்து அங்கு புதிய தலைமை, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

சிரியாவில் பாலைவனத்தில் வசிக்கும் பெடோயின் என்ற பழங்குடி மக்களுக்கும் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த மோதலை நிறுத்துவதற்காக அப்பகுதிகளுக்கு படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்தது. இதில் உயிரிழப்புகள் மட்டுமே அதிகரித்ததே தவிர, மோதல் நிற்கவில்லை.

இதனிடையே, இஸ்ரேல் இன்று சிரியாவின் அரசு கட்டடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. சிரியாவின் தெற்கில் உள்ள சுவேதா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேபோன்று, லெபனானின் பேகா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிஸ்புல்லா ஆயுதப் படையினருக்கு ஆதரவுக்கரம் அங்கு அதிகம் உள்ளதால், அப்பகுதியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், ஹிஸ்புல்லாக்களுக்கும், லெபனான் அரசுக்கும் இஸ்ரேல் விடுத்துள்ள தெளிவான செய்திதான் இந்தத் தாக்குதல். தங்கள் ராணுவத்தின் திறனை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் எந்தவொரு தீவிர தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

summary

Israeli air raids struck eastern Lebanon's Bekaa Valley and Syria's southern Suwayda region

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.