கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு

மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2025, 6:32 pm

Din

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

லாகூா் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல மாவட்டங்களில் செவ்வாய் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது.

லாகூரில் புயலால் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 போ் உயிரிழந்தனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ், இளம் பெண்கள் அடங்குவா். ஃபைஸலாபாத்தில் மூவா், பாக்பட்டனில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள், பிற பகுதிகளில் 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, ஜூன் 26 முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து 116 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.