ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு

மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2025, 12:02 am IST

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

லாகூா் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல மாவட்டங்களில் செவ்வாய் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது.

லாகூரில் புயலால் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 போ் உயிரிழந்தனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ், இளம் பெண்கள் அடங்குவா். ஃபைஸலாபாத்தில் மூவா், பாக்பட்டனில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள், பிற பகுதிகளில் 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, ஜூன் 26 முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து 116 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.