பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் பருவமழை: உயிரிழப்பு 140-ஆக உயா்வு

மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2025, 6:32 pm

Din

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 24 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்தப் பேரிடா் உயிரிழப்பு எண்ணிக்கை 140-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

லாகூா் மற்றும் பஞ்சாப் மாகாணங்களின் பல மாவட்டங்களில் செவ்வாய் இரவு முழுவதும் இடைவிடாத மழை பெய்தது.

லாகூரில் புயலால் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 12 போ் உயிரிழந்தனா். இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து போ், இளம் பெண்கள் அடங்குவா். ஃபைஸலாபாத்தில் மூவா், பாக்பட்டனில் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள், பிற பகுதிகளில் 9 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, ஜூன் 26 முதல் பருவமழை தொடங்கியதில் இருந்து 116 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.