நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், 2 இந்தியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுடன், ஒருவரை கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நைஜரின் தொஸ்ஸோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி, அங்குள்ள கட்டுமானப் பணிகளுக்கு, அந்நாட்டு ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அப்போது, அங்கு திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவரை அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக, நைஜர் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூலை 19) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பலியானவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்காகவும், கடத்தப்பட்டவரை பத்திரமாக மீட்கவும், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, இந்தியத் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்துடன், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Summary
Terrorists have shot dead two Indians and kidnapped one in southwestern Niger, the Indian Embassy has said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!
அஸ்ஸாம் காவல்துறை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கேள்வி!

பஹல்காம் தாக்குதல்! உறுதியளிக்கப்பட்ட அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் கொல்லப்பட்டவரின் மகள்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


