எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?

தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2025, 5:56 pm IST

தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.

இதில் 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷிய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் விடியோக்களை தொடர்ந்து அவை வெளியிட்டு வந்ததாகவும் யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.

யூடியூப் நீக்கிய பெரும்பாலான சேனல்களின் விடியோக்கள் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. அவை பெரும்பாலும் சீன அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்க்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் இருந்ததாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக நீக்கப்படட் சேனல்களில் 2,000 சேனல்கள் ரஷிய மொழியில் விடியோக்களை வெளியிட்டுள்ளன. இவை ரஷியாவுக்கு ஆதரவான பார்வைகளைப் பகிர்ந்ததோடு மட்டுமின்றி நேட்டோ, உக்ரைன், மேற்கு நாடுகளை விமர்சிக்கும் வகையில் விடியோக்களை வெளியிட்டுள்ளன.

கூகுளுக்குச் சொந்தமான பகுப்பாய்வுக் குழுவினர், உலக அளவிலான இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தளத்தை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், நேர்மையானதாக வைத்துக்கொள்ளும் பொருட்டு இப்பணிகளைச் செய்து வருவதாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 2025 மே மாதத்திலேயே 20 யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியிருந்தது. இதில் 4 சேனல்கள் விளம்பரங்களுக்கானவை, ஒன்று ரஷியாவுக்குச் சொந்தமானது. கடந்த 2022ஆம் ஆண்டு உன்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்குப் பிறகு அந்நாட்டுக்குச் சொந்தமான முக்கிய பல யூடியூப் சேனல்களை கூகுள் முடக்கியிருந்தது.

மற்ற நாடுகளிலும் நீக்கம்

சீனா, ரஷியா மட்டுமின்றி, பிரசார நோக்கத்தில் செயல்பட்ட மற்ற சில நாடுகளுக்குச் சொந்தமான யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. ஈரான், அஜர்பைஜான், துருக்கி, இஸ்ரேல், ரோமானியா மற்றும் கானா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆர்மீனியா நாட்டின் மீதான தாக்குதலின்போது, 457 சேனல்கள் அஜர்பைஜான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரசார நோக்கத்தில் விடியோக்களை வெளியிட்டுள்ளன.

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் யூடியூப் சேனல்கள், ப்ளாக், விளம்பரங்கள் என 30,000 கணக்குகளை கூகுள் நீக்கியுள்ளது. இது பொய் பிரசாரங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிரான தொழில்நுட்ப நிறுவனத்தின் போராட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது.

Summary

Over 11,000 YouTube Channels Linked To China And Russia Removed By Google

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.