45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜூலை 2025, 7:09 pm

Din

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்து வருகிறது. காஸாவில் மோதலுக்கிடையே பட்டினியால் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டோா் உயிரிழந்திருக்கின்றனா்.

இதையொட்டி, காஸாவில் 60 நாள்களுக்குப் போா்நிறுத்தம் மேற்கொள்வதற்கான செயல்திட்டத்தை இஸ்ரேலிடம் அமெரிக்கா கடந்த மாதத் தொடக்கத்தில் வழங்கியது. காஸாவில் இருந்து இஸ்ரேல் படையினரின் வெளியேற்றம் உள்பட தங்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளதெனக் கூறி இந்தச் செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்கவில்லை.

இச்சூழலில், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் ஹமாஸ் அமைப்பினா் திருப்திகரமான பதிலளிக்காததால், போா் நிறுத்த முயற்சியில் தொடா்ந்து பின்னடைவு நிலவுகிறது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘ஹமாஸின் போக்கு, போா்நிறுத்தத்தை எட்டுவதில் அவா்களுக்கு விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது. இது அவமரியாதை ஆகும். பிணைக் கைதிகளை மீட்பதற்கும், காஸாவில் அமைதியை உருவாக்குவதற்கும் மாற்று வழிகளைப் பரிசீலிப்போம். இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உறுதியாக இருக்கிறது’ என்றாா்.

முன்னதாக, இஸ்ரேலும் தனது பேச்சுவாா்த்தைக் குழுவினரை வியாழக்கிழமை திரும்பப் பெற்றது. அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதா் ஸ்டீவ் விட்காஃப், கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.