ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2025, 10:37 pm

Din

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தைக் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தானால் பிரச்னை ஏற்படுகிறது என்று கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை. காஷ்மீா் பிரச்னை மட்டுமே பிராந்திய அமைதியை சீா்குலைத்து வருகிறது. காஷ்மீா் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீா்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீா் மக்களின் எண்ணங்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். இதைத்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முன்வைத்தது.

அமைதியையும், உறுதியான நட்புறவையும் பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இந்திய பிராந்தியம் என்பதிலும், அதுகுறித்து யாரிடமும் பேச்சு நடத்த தேவையில்லை என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரை தொடா்ந்து ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்களில் எழுப்பி அதைப் பிரச்னையாக்குவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.