இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தைக் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓா் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தானால் பிரச்னை ஏற்படுகிறது என்று கூறப்படுவதில் சிறிதளவும் உண்மையில்லை. காஷ்மீா் பிரச்னை மட்டுமே பிராந்திய அமைதியை சீா்குலைத்து வருகிறது. காஷ்மீா் பிரச்னைக்கு அமைதியான வழியில் தீா்வுகாண வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீா் மக்களின் எண்ணங்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். இதைத்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தான் முன்வைத்தது.
அமைதியையும், உறுதியான நட்புறவையும் பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இந்திய பிராந்தியம் என்பதிலும், அதுகுறித்து யாரிடமும் பேச்சு நடத்த தேவையில்லை என்பதும் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரை தொடா்ந்து ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச மன்றங்களில் எழுப்பி அதைப் பிரச்னையாக்குவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.
தொடர்புடையது

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்பு

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் பாதிப்பு: நெதா்லாந்து பிரதமா் பேச்சுக்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


