25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

அமெரிக்காவில் பொது நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :10 ஜூன் 2025, 9:44 am

DIN

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை 1.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ள நிலையில், நூலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த நூலகத்தில் பரவியுள்ள தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.

மேலும், இதுகுறித்து நாஷ்வில் தீயணைப்பு துறையும், இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.