அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

அமெரிக்காவில் பொது நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதைப் பற்றி...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை 1.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ள நிலையில், நூலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த நூலகத்தில் பரவியுள்ள தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.

மேலும், இதுகுறித்து நாஷ்வில் தீயணைப்பு துறையும், இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com