மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

கிரீஸ் கடலோரக் காவல் படை நூற்றுக்கணக்கான அகதிகளை மீட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜூன் 2025, 11:29 am

DIN

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியில் நேற்று (ஜூன் 19) இரவு மீன்பிடி படகில் சுமார் 352 அகதிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்ற ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்புப் படையான ஃப்ரொண்டெக்ஸ் அமைப்பினர், அந்தப் படகிலிருந்த பயணிகள் அனைவரையும் தங்களது கப்பல்கள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிரீட் தீவின் தென் கடல்பகுதியில் மற்றொரு மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் படகிலிருந்த 278 பேரையும் அப்பகுதியில் சென்ற போர்ச்சுகல் நாட்டின் சரக்கு கப்பல் மீட்டு கரைக்கு அழைந்து வந்துள்ளது.

இந்நிலையில், இந்த 2 மீன்பிடி படகில் பயணித்த அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேபோல், அப்பகுதியில் அகதிகளுடன் வந்த மேலும் 2 படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், ஒரு படகில் 73 பேரும், மற்றொரு படகில் 1 பெண் 3 குழந்தைகள் உள்பட 26 பேரும் மீட்கப்பட்டதாக கிரீஸ் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த 2 சிறிய படகுகளும், கடந்த ஜூன் 18 ஆம் தேதி மாலை லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், கிரீஸ் நாட்டுக்குச் செல்வதற்காக அவர்களது கடத்தல்காரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வரையில் கொடுத்தாகவும் அதில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின்பேரில் அந்தப் படகுகளை இயக்கி வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பிழைப்புத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் பயணம் செய்கின்றனர்.

இதில், பெரும்பாலான மக்கள் கடத்தல்காரர்களின் உதவியோடு கப்பல்கள் மூலம் பயணம் செய்வதால், வழியில் ஏற்படும் ஆபத்துகளில் அவ்வப்போது சிக்கி பலர் பலியாவது தொடர் கதையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.