போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(ஜூன் 24) அறிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை.
இஸ்ரேல் மீது கடைசியாக ஒரு தாக்குதலை மேற்கொண்ட பிறகு போர்நிறுத்தம் அறிவிப்பதாக ஈரான் தரப்பு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் சைரன் சத்தங்கள் கேட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தினால் தெஹ்ரான் அதிரும் என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தாக்கினால் பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கான தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

வளைகுடா போரில் இணையும் யேமனின் ஹவுதிகள்! இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!

ஈரான் தலைநகரில் 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல்! - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


